75 வயதானதால் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ராஜேஷ் அகர்வால், தாமாக முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Aug 20, 2019, 22:00 IST
| உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ராஜேஷ் அகர்வால், தாமாக முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனக்கு 75 வயது ஆகிவிட்டதாகவும், கட்சி விதிமுறைகளின்படி, இனி அமைச்சர் பதவி வகிக்க கூடாது என்பதால் தாமே முன்வந்து பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
கட்சி தலைமை இனி என்ன உத்தரவிடுகிறது அதை சிரமேற்கொண்டு செய்ய தயாராக இருப்பதாகவும் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்வது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in