திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைசாத்தப்பட்டது. மீண்டும் நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Jul 17, 2019, 00:41 IST
| சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைசாத்தப்பட்டது. மீண்டும் நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு சந்திர கிரஹணம், இன்று நள்ளிரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறுகிறது. நம் நாட்டில் நாளை அதிகாலை 1.31 மணிக்கு தொடங்கி காலை 4.30 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும்போது, பூமி, சூரியனை பகுதி அளவாகவோ, முழுமையாகவோ மறைக்கும். இது நிலவில் எதிரொலிக்கும் அற்புத நிகழ்வு தான் சந்திர கிரகணமாகும்.
newstm.in
newstm.in