நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Nov 14, 2019, 14:04 IST
| முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Newstm.in
newstm.in