JEE நுழைவுத்தேர்வு சர்ச்சை: தேசிய தேர்வு முகமை விளக்கம்
JEE நுழைவுத்தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
Nov 8, 2019, 02:20 IST
| JEE நுழைவுத்தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
JEE நுழைவுத்தேர்வு ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழியில் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், குஜராத் அரசு கேட்டுக் கொண்டதால் குஜராத்தி மொழியில் JEE நுழைவுத்தேர்வு நடைபெறும் என்றும், இந்த தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.
newstm.in
newstm.in