ஊடகங்கள் கிண்டல் செய்வதற்கு அரசியல்வாதிகள் கார்ட்டூன்களா? : கொதித்தெழுந்த முதல்வர்
ஊடகங்கள் கிண்டல் செய்வதற்கு அரசியல்வாதிகள் கார்ட்டூன்களா? அல்லது வேலை இல்லாதவர்களா? என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மைசூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், ’ஊடகங்கள் கிண்டல் செய்வதற்கு அரசியல்வாதிகள் கார்ட்டூன்களா? அல்லது வேலை இல்லாதவர்களா?, அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், யாருக்கோ உதவி செய்ய தனது பெயரை ஊடகங்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய குமாரசாமி, அரசியல்வாதிகளை ஊடகங்கள் கேலி செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
newstm.in
newstm.in