Logo

மும்பை: ஓ.என்.ஜி.சி தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மும்பை ஓ.என்.ஜி.சி எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 | 

மும்பை: ஓ.என்.ஜி.சி  தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மும்பை ஓ.என்.ஜி.சி எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  நவி பகுதியில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில எம்.எல்.ஏ மனோகர் போயர் தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP