Logo

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் செக்டாரில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் செக்டாரில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டார் பகுதியில் ஷாபூர், கெர்னி ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், கெர்னி செக்டாரில் 5 கிமீ சுற்றளவுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காஷ்மீர் சோபியான் மாவட்டத்திலும், பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தெற்கு காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP