Logo

இளம் பெண் மருத்துவர் மட்டுமல்ல... ஏற்கெனவே 9 பேரை கற்பழித்து எரித்து கொன்றோம்... அதிர வைத்த வாக்குமூலம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண்மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 | 

இளம் பெண் மருத்துவர் மட்டுமல்ல... ஏற்கெனவே 9 பேரை கற்பழித்து எரித்து கொன்றோம்... அதிர வைத்த வாக்குமூலம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண்மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட சென்னகேசவலு, நவீன்,ஷிவா, முகமது பாஷா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இளம் பெண் மருத்துவர் மட்டுமல்ல... ஏற்கெனவே 9 பேரை கற்பழித்து எரித்து கொன்றோம்... அதிர வைத்த வாக்குமூலம்!

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது, 4 பேரும் தப்பியோட முயன்றதால், போலீசார் என்கவுண்டரில் சுட்டுகொன்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். 

இளம் பெண் மருத்துவர் மட்டுமல்ல... ஏற்கெனவே 9 பேரை கற்பழித்து எரித்து கொன்றோம்... அதிர வைத்த வாக்குமூலம்!

இதனிடையே, என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் முகமது பாஷா, சென்ன கேசவலு இருவரும் இறப்பதற்கு முன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலம் குறித்த தகவல் போலீசார் தரப்பில் வெளியாகியுள்ளது. அதில், ஏற்கனவே பெண் மருத்துவர் போல, பாலியல் தொழிலாளிகள், திருநங்கைள் மற்றும் தனியாக சிக்கிய பெண்கள் என 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றுள்ளோம் என வாக்குமூலம் அளித்துள்ளார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இளம் பெண் மருத்துவர் மட்டுமல்ல... ஏற்கெனவே 9 பேரை கற்பழித்து எரித்து கொன்றோம்... அதிர வைத்த வாக்குமூலம்!

இது குறித்து மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP