ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுறுவல்- கேரளாவில் உச்சகட்ட பாதுகாப்பு
கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவ கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
May 26, 2019, 18:50 IST
| கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவ கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடற்கரையோர கிராமங்களில் ஐஎஸ், தீவிரவாதிகள் ஊடுருவ கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் 15 ஐஎஸ் தீவிரவாதிகள் வெள்ளை நிற படகில் இலங்கையில் இருந்து லட்ச தீவை நோக்கி பயணிப்பதாகவும் அதனால் கேரளாவின் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள கடலோர பகுதிகளில், கடற்படை வீரர்கள் அதிநவீன படகுகள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
newstm.in
newstm.in