Logo

கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியதுடன், அவர் முன்ஜாமீன் பெற ஏழு நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது.
 | 

கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியதுடன், அவர் முன்ஜாமீன் பெற ஏழு நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. 

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் இன்று ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ முயன்ற நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதனை தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கைது செய்யக் கூடாது என்றும், அவர் தானாக சிபிஐ முன் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதன்படி, கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் இன்று ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, இன்றைய வழக்கின் விசாரணையில் அவரை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியது. மேலும், அவருக்கு ஏழு நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு நாட்களுக்குள், அவர் உரிய நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP