ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
Nov 27, 2019, 20:46 IST
| ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நாளைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐயால் கைது செய்யப்பட்ட வழக்கில் அக்டோபர் 22ஆம் தேதி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் சிதம்பரத்தின் சிறைவாசம் நாளை 100ஆவது நாளை எட்டுகிறது.
newstm.in
newstm.in