மகாராஷ்டிரா வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Nov 24, 2019, 18:20 IST
| தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருவது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், இதற்கு மத்திய அரசும், மகாராஷ்டிர மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ் சமர்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை நாளை 10.30 மணிக்கு மத்திய அரசு சமர்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
newstm.in
newstm.in