Logo

ப.சிதம்பரம் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ப.சிதம்பரம் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலை உருவானது. இதையடுத்து ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்க வந்தபோது, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நவ.26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP