Logo

பெண்களிடம் கண்ணியக்குறைவாக சைகை காட்டினால் சிறை: டெல்லி நீதிமன்றம் அதிரடி!!

பெண்களிடம் கண்ணியக்குறைவான வார்த்தைகள் உபயோகிப்பதோ அல்லது சைகை காட்டுவதோ சட்டப்படி குற்றம் எனவும் சிறை தண்டனை உறுதி எனவும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
 | 

பெண்களிடம் கண்ணியக்குறைவாக சைகை காட்டினால் சிறை: டெல்லி நீதிமன்றம் அதிரடி!!

பெண்களிடம் கண்ணியக்குறைவான வார்த்தைகள் உபயோகிப்பதோ அல்லது சைகை காட்டுவதோ சட்டப்படி குற்றம் எனவும் சிறை தண்டனை உறுதி எனவும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

பெண்களிடம் அவதூறாக பேசுவது, கண்ணியம் தவறி  நடப்பது, அருவறுக்கத்தக்க முக பாவணைகள் காட்டுவது போன்ற அனைத்தும் இந்திய தண்டனை சட்டம் 509 மற்றும் 323 இன் கீழ் குற்றமாக கருதப்படும் எனவும், மீறினால் அபராதத் தொகையும் 3 வருடம் வரை சிறை காவலிலும் வைக்கப்படலாம் எனவும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஒரு பெண் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தான் நீதிமன்றம் தற்போது இந்த முடிவு எடுத்துள்ளது. அந்த பெண் குற்றம் சாட்டிய நபருக்கான தீர்ப்பு வரும் செவ்வாயன்று வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP