Logo

"நீங்களாக திருந்தவேண்டும், இல்லையேல்!" எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை

இலங்கையில் ஒருமித்த நாட்டுக்கே ஆதரவு - எம்.ஏ.சுமந்திரன்
 | 

"நீங்களாக திருந்தவேண்டும், இல்லையேல்!" எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை


இலங்கையில் ஒற்றையாட்சிக்கு அல்ல, ஒருமித்த நாடு என்பதற்கே இணங்கினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான பொதுகூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என கூறப்பட்டுள்ளது. “ஏக்கிய ராச்சிய" என்பது ஒற்றையாட்சி அல்ல அது ஒருமித்த நாடு என்பதும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனவே ஒருமித்த நாடு என்பதற்கே கூட்டமைப்பு இணங்கியுள்ளது என்றார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஊடகங்கள் பொய் சொல்லக் கூடாது என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க, ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன. தாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்ககூடாது. மேலும் சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றியடைய இயலாது என சொல்கிறார்கள். ஊடகங்களுக்கு பயந்து நாங்கள் மக்களிடம் சென்று பொய்யை சொல்ல இயலாது. 

70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் துயரங்களை சந்தித்தார்கள். அந்த துயரங்களுக்கு ஒரு தீர்வினை காணவேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களை ஏற்க முடியாதென்ற ஒரு கருத்து கூட இல்லை. எனவே ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்தவேண்டும், நீங்களாக திருந்தவேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள்" என எச்சரித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP