இலங்கையில் துப்பாக்கிச் சூடு: இருவர் படுகாயம்
கொழும்பு தெமட்டகொட பகுதியில் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சுட்டில் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
Oct 28, 2018, 22:46 IST
| கொழும்பு தெமட்டகொட பகுதியில் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சுட்டில் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு தெமட்டகொட பகுதியில் உள்ள பெட்ரோலிய அமைச்சகத்திற்கு வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டதால், ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in