Logo

இலங்கையில் 7வது முறை குண்டுவெடிப்பு! கொழும்புவில் பதற்றம்..

இலங்கையில் இன்று காலை 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து, தொடர்ந்து கொழும்பு உயிரியல் பூங்கா அருகே உள்ள ஹோட்டலில் 7வது முறையாக குண்டு வெடித்துள்ளது.
 | 

இலங்கையில் 7வது முறை குண்டுவெடிப்பு! கொழும்புவில் பதற்றம்..

இலங்கையில் இன்று காலை 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து, தொடர்ந்து கொழும்பு உயிரியல் பூங்கா அருகே உள்ள ஹோட்டலில் 7வது முறையாக குண்டு வெடித்துள்ளது. 

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இன்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி என்பன அந்த 6 இடங்களாகும். 

இந்த 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், பலி எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், பலியானவர்களில் 35 பேர் வெளிநாட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், தொடர்ந்து கொழும்பு தெகிவாலா(Dehiwala) என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்கா அருகே உள்ள ஹோட்டலில் 7வது முறையாக குண்டு வெடித்துள்ளது. இங்கு குணவெடிப்பு நிகழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

தொடர் குண்டுவெடிப்பையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP