நைஜீரியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல்; 12 பேர் பலி
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Jan 18, 2018, 16:34 IST
| நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கே மைதுகுரி நகரத்தில் முனா கார்கே எனும் இடத்தில் நேற்று இரண்டு பெண் தீவிரவாதிகள் தங்கள் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மைதுகுரி- முனா கார்கே பகுதி மக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் 'போகோ ஹரம்' எனும் தீவிரவாதிகள் அமைப்பு தொடர்ந்து இந்த இடத்தில் தாக்குதலை நடத்தி வருகிறது. எனவே தற்போது நடந்துள்ள தாக்குதலுக்கும் போகோ ஹரம் தீவிரவாத இயக்கம் தான் காரணம் என காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் கூறியுள்ளனர்.
newstm.in