இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவாகியது.
Sat, 18 May 2019
| இந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவாகியது.
இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மண்டல புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த வீடுகள் குலுங்கின. எனினும் இதனால் உயிருக்கோ, பொருட்களுக்கோ சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இத்தீவு அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகள் ஏற்படுவதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in
newstm.in