காபூல் ஓட்டல் தாக்குதலில் 18 பேர் பலி
காபூல் ஓட்டல் தாக்குதல் முடிவுக்கு வந்தது; 12 பேர் பலி
Jan 22, 2018, 02:28 IST
| ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச ஓட்டலில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு, 5 தீவிரவாதிகள் பலத்த பாதுகாப்பு கொண்ட இன்டர்கான்டினன்டல் ஓட்டலுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
சுமார் 13 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலின் முடிவில், 14 வெளிநாட்டவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு படையினர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
newstm.in