Logo

பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் தீவிரவாத தாக்குதல்: இரு போலீசார் பலி

பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு போலீசார் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் தீவிரவாத தாக்குதல்: இரு போலீசார் பலி

பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு போலீசார் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் க்ளிஃப்டன் என்ற பகுதியில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து மர்ம நபர்கள் 4 பேர் தூதரகத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசாரால் கருதப்படுகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தினால் பாகிஸ்தான் கராச்சியில் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP