Logo

சீனாவில் கனமழைக்கு 61 பேர் பலி

சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

சீனாவில் கனமழைக்கு 61 பேர் பலி

சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 

தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெருமளவு விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பீஜியாங் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.  

குவாங்டங் மாகாணத்தில், வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் அவர்களை தங்க வைத்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP