1. Home
  2. ஆரோக்கியம்

தினசரி ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால்...

தினசரி ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால்...

பொதுவாக வெயில் காலத்தில் நம்முடைய உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும்.

பாலிலிருந்து கிடைக்கும் தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி தயாரிக்கப்படுவதுதான் மோர். இது தயிரைக் காட்டிலும் அதிகப் பலன் தருகிறது.

பொதுவாக கோடை காலத்தில் எல்லா வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும். மோர் நம் உடலுக்கு உடலுக்கு குளிர்ச்சியையும், ஆற்றலையும் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. மோர் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கோடை வெப்பத்தால் பல நேரங்களில் நம்முடைய கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்படும். மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்களில் இருக்கும் எரியும் உணர்வு நீங்கும். கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும்.

அதே போல் சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் மோர் தடவவும். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை என்பது இப்போது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. கோடையில் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் உடலில் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மோர் அசிடிட்டிக்கு அரும்மருந்தாக செயல்படுகிறது.

கொஞ்சம் கல் உப்பு, கருப்புமிளகு, சீரகம் கலந்து மோரை குடித்து பாருங்கள். உங்கள் உடலில் அமிலத்தன்மை உடனே மறையும். ஆகவே தான் ஆண்களும் பெண்களும் மதியம் மோர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தினசரி ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால்...


மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • மோர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மோர் உங்கள் கல்லீரல் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது.
  • மோரில் அதிகம் கால்சியம் உள்ளது, எனவே மோர் குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.
  • மோர் குறைந்த கலோரிகளை கொண்டது.
  • செரிமான அமைப்பை மேம்படுத்த மோர் குடிக்கலாம்
  • மோர் உடல் சூட்டை தணித்து, வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
  • தினமும் மோர் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் வாய்வு பிரச்சனைக்கும் நிவாரணம் கிடைக்கும்.
  • மோர் குடிப்பதால் சருமம் மற்றும் கூந்தல் ஈரப்பதமாகி வறண்டு போகும் பிரச்சனையை போக்குகிறது
  • மோரை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதனால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • வெயிலில் செல்வதற்கு முன் மோர் குடிக்கலாம், ஆனால் வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த மோர் குடிக்க வேண்டாம்.

Trending News

Latest News

You May Like