Logo

நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி 

வீட்டுக்குள் நல்ல சக்திகள் இருப்பதன் அறிகுறி லட்சுமி கடாட்சம் தான். யாருடைய வீட்டில் வறுமை இல்லாமல் நிறைந்த செல்வமும், பிணியில்லா ஆரோக்யமும், செய்தொழிலில் நிம்மதியும், வாழ்வில் முன்னேற்றமும், மனத்தில் அமைதியும் குடிகொண்டிருக்கிறதோ அவர்கள் வீட்டில்தான் நல்ல சக்திகளும் மஹாலஷ்மியும் இருப்பதாக சொல்வார்கள்.
 | 

நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி 

வீட்டுக்குள் நல்ல சக்திகள் இருப்பதன் அறிகுறி லட்சுமி கடாட்சம் தான். யாருடைய வீட்டில் வறுமை இல்லாமல் நிறைந்த செல்வமும், பிணியில்லா ஆரோக்யமும், செய்தொழிலில் நிம்மதியும், வாழ்வில் முன்னேற்றமும், மனத்தில் அமைதியும் குடிகொண்டிருக்கிறதோ அவர்கள் வீட்டில்தான்  நல்ல சக்திகளும் மஹாலஷ்மியும் இருப்பதாக சொல்வார்கள். 

நல்ல சக்திகள் நம்முடைய  நல்ல செயல்களிலிருந்து உருவாகுபவை என்றும் சொல்லலாம். குல தெய்வ வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு, அதர்ம வழியில் செல்லாமை,  ஜாதக ரீதியாக தோஷங்கள் ஏற்பட்டு துன்பத்தை அடைந்தாலும் இறைவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையால் இவர்கள் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். எத்தகைய சோதனையான நிலையிலும் மனம் தளரமாட்டார்கள். ஆனால் இத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மக்கள் குறைந்த சதவீதத்தையே கொண்டிருக்கிறார்கள். 

தாண்டவமாடும் வறுமை,  நீடித்த நோய், மன சோர்வு, தொழிலில் பின்னடைவும்,  குடும்பத்தில் சச்சரவு, அமைதியின்மை இவையெல்லாம் நெடுங்காலம் தொடரும் பட்சத்தில் வீட்டுக்குள் தீயசக்தியின் ஆதிக்கம் சிறிது சிறிதாக மேலோங்கி வருகிறது என்று அறியலாம். இதை உணர்ந்துகொண்டாலும் அதிலிருந்து மீண்டு வர நினைத்தாலும் தீய சக்திகள் இக்குடும்பத்தினரை அடக்கி ஆளவே செய்யும். இத்தருணத்தில் நம் மீது உண்டாகும் கண் திருஷ்டி, பொறாமை, சாபம், ஏவி விடும் மாந்திரீகம் மேலும் குடும்பத்தை நிலைகுலையவே செய்யும்.

இத்தகைய தீயசக்திகளை நீக்கி நல்ல சக்திகளைப் பெறுவதற்கு என்ன செய்யலாம்? நல்ல சக்தி என்பது நேர்மறையான ஆற்றல் என்றும் தீயசக்தி எதிர் மறையான ஆற்றல் என்றும் விஞ்ஞானபூர்வமாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நேர்மறையான சக்தியை அதிகரிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள் உண்டு என்கிறார்கள் முன்னோர்கள்.

அன்றாடம் அதிகாலை வாசலில் அகல்விளக்கு தீபம், பூஜையறையில் விளக்கேற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுங்கள். வாரந்தோறும் பூஜையறையைச் சுத்தப்படுத்தி மந்திரங்கள் ஜபித்து விளக்கேற்றி வழிபடுங்கள். வீடு முழுவதும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணியை போட்டு புகையைப் பரப்புங்கள். மூலை முடுக்கில் இருக்கும் துஷ்ட சக்திகளும் மறைந்திருக்கும் பீடைகளும் ஓடி விடும். வாரம் ஒருமுறை வீட்டுக்குள் கோமியம் தெளியுங்கள். கோமியம் இல்லையென்றாலும் மஞ்சள் நீராவது தெளிப்பது நல்லது.

வீட்டை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் வாசனை திரவியங்களை சேர்த்து சுத்தம் செய்வதை விட கல் உப்பை நீரில் சேர்த்து கரைந்ததும் வீட்டை துடையுங்கள். எதிர்மறை சக்தியை ஒழிக்கும் ஆற்றலை பெற்றது மகாலஷ்மியின் வசிப்பிடமான உப்பு. வீட்டின்  நுழைவாயிலில் கண்ணாடிக் கிண்ணத்தில் நீரை ஊற்றி எலுமிச்சையை போட்டு வைத்தால் வீட்டின் உள் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆற்றலை செயலிழக்க செய்யும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை எலுமிச்சையை மாற்றி வைக்கலாம்.

வருடத்துக்கு ஒரு முறையாவது முறையான மந்திரம் கற்ற புரோகிதர்களை வைத்து கணபதி ஹோமம் வளர்த்துங்கள். இந்த ஹோமமானது  வீட்டுக்குள் இருக்கும் அனைத்து துஷ்ட சக்திகளையும் விரட்டி அடிக்கும். இயன்றவரை வீட்டில் தேவையற்ற பொருள்களைச் சேமிக்காதீர்கள். லஷ்மி வசிக்க விரும்பாத இங்குதான் தீய சக்திகள் வசிக்க விரும்பும். சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். வீட்டுக்குள் நல்ல சக்தியான நேர்மறை எண்ணங்களை வளர்த்துவிடுங்கள். வாழ்க்கையை நிம்மதியாக கடப்பீர்கள்.

மேற்கண்டவற்றை கடைப்பிடித்து நேர்மறை சக்தியை தக்கவைத்து எதிர்மறை சக்தியை  விரட்டிய நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை விஞ்ஞானத்தையும் வியக்க வைக்கிறது என்பதற்கான உதாரணங்களில் ஒன்றுதான் இந்த பாஸிட்டிவ் எனர்ஜி என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP