Logo

உடலும் உள்ளமும் தூய்மையடைய என்ன செய்யலாம்?

பிடித்துள்ள தோஷங்கள், பில்லி, ஏவல் சூனியங் கள், பீடைகள், பிணிகள் அனைத்தும் தானாகவே நீங்கும்.அவரால்அவர் குடும்பம் முழுமையும் பயனடையும். அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் இறைவனும் நம்மை...
 | 

உடலும் உள்ளமும் தூய்மையடைய என்ன செய்யலாம்?

இறைவனிடம் வேண்டியது கிடைக்கப் பெற்றால் அது நிறைவேறியதும் அங்கபிரதட்சணம் செய்யும் வழக்கம் உண்டு. தலை, நெற்றி, கரங்கள், தோள் பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் போன்ற அவய அங்கங்கள் பூமியில் படும்படியாக  வணங்கி வழிபடுவதே அங்க பிரதட்சணம் என்றழைக்கப்படுகிறது. இதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்றும் சொல்வார்கள். எனக்கு சகலமும் நீயே என்று இறைவனை  நோக்கி சர்வ அங்கமும் படும்படி கோயில் பிரகாரத்தைச் சுற்றி வருவதே அங்கபிரதட்சணம் ஆகும்.

குறிப்பிட்ட கோயில்களில் தான் அங்கபிரதட்சணம் என்பதெல்லாம் கிடையாது. எல்லா ஆலயங் களிலுமே அங்கபிரதட்சணம் செய்யலாம். அங்க பிரதட்சணம் செய்வதற்கு முன்பு உடலை தூய்மையாக்கி  குளித்து முடித்து ஈரத்துணியுடன்  பலி பீடம் முன்பு வர வேண்டும். பிறகு கிழக்கு நோக்கி தரையில் உருண்டவாறு மேற்கு பக்கமாக  உருண்டு வந்து பலி பீடத்தில் வந்து வேண்டுதலை முடிக்க வேண்டும்.

அங்க பிரதட்சணம் செய்யும் போது வேகமாக உருண்டு வரக் கூடாது. இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை உச்சரித்தப்படி  அவயங்கள் பூமியில் நன்றாக படும்படிமெதுவாக உருள வேண்டும். அவயங்கள் பூமியில் படும்போது  உடலிலுள்ள கர்ம பலன்கள் பூமியில் இறங்கி தெய்வ சக்தியிடம் கலந்து நமது பாவங்கள் தீர்க்கும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

ஆலயங்களில் முனிவர்கள் இறைவனைத் தியானித்து அங்கேயே தங்கியிருந்து இறை தரிசனம் செய்து உயிருடன் சமாதியாகியிருக்கிறார்கள். இவர்கள் தினமும் சூட்சும ரூப வடிவில் வந்து இறைவனைத் தரிசிப்பதாக கூறுகிறார்கள்.மேலும் தேவர்களும், ரிஷிகளும், தேவகணங்களும் கூட இன்றும் பல தலங்களில் சூட்சும வடிவில் வந்து இறைவனைத் தரிசிப்பதாக பல தலங்களில் வரலறு கூறுகிறது. அவர்களது பாதம் பட்ட புனிதமான இடங்களில்  செய்யப்படும் அங்கப்பிரதட்சணத்துக்கு அதிக நன்மை உண்டு. இதனால் பிரதட்சணம் செய்பவர்களின் உடலும் உள்ள மும் தூய்மை அடையும்.

தேவ வலிமையும், ஆன்ம சக்தியும் அதிகம் கொண்டது அங்கபிரதட்சண முறை. கர்ம வினைகள் நீங்க சிறந்த வழிபாடு அங்கபிரதட்சணம். யார் மனம் முழுக்க இறைவனை தியானித்து அங்கபிரதட்சணம் செய்கிறார்களோ அவர்களைப் பிடித்துள்ள தோஷங்கள், பில்லி, ஏவல் சூனியங்கள், பீடைகள், பிணிகள் அனைத்தும் தானாகவே நீங்கும்.அவரால்அவர் குடும்பம் முழுமையும் பயனடையும். அறிந்தும் அறியாமலும் செய்த தவறு களை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் இறைவனும் நம்மை  ஏற்றுக்கொண்டு ஆசிர்வதிப்பார்கள். 

அங்கபிரதட்சணம் முடித்ததும் மீண்டும் குளித்து முடித்து கருவறையில் இறைவனைத் தரிசிக்க வேண்டும்  என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள். உடலுக்கும் ஆரோக்யத்தையும் உள்ளத்துக்கு ஆன்ம பலத்தையும் தரும் பூஜை முறை என்று அங்கபிரதட்சணத்தைப் பற்றி சொல்லலாம். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP