Logo

வாகனங்கள் வாங்கியதும் ஏன் இந்த கோவிலுக்கு போறாங்கனு தெரியுமா !!

 | 

சென்னை சென்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ளது பாடிகாட் முனீஸ்வரன் கோயில். மக்கள் புது வாகனங்கள் வாங்கியதும் , இக்கோயிலில் வந்து பூஜை செய்வது வழக்கமாக மாறிவிட்டது. இந்த கோயிலில் வாகனங்களை பூஜை செய்தால் வாகனம் நிரந்தரமாக ஒருவரிடம் தங்கும் என்பது ஐதீகம்.

1860 ஆம் ஆண்டு ஆர்காட்டிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் குலதெய்வமாக தங்களுடன் எடுத்து வர பட்டவர் இந்த முனீஸ்வரன். ஆரம்பத்தில் தலைமை செயலக வளாகத்தில் இருந்தவர் 85 ஆண்டுகளுக்கு முன் சென்டிரல் ரயில் நிலையத்தின் எதிரில் பல்லவன் பணிமனையின் முன் பிரதிஷ்டை செய்யபட்டார்.

அப்போது இங்கு பல்லவன் பேருந்துகளுக்கு பாடி கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் இந்த பெயரிலேயே முனீஸ்வரன் அழைக்கபட்டார் பின்னாளில் இது பாடிகாட் முனீஸ்ரன் என்று மறுவியது.

இந்த பகுதியில் முன்பு ஆங்கில அதிகாரிகள் குடியிருப்பு இருந்த தாகவும் அதில் ஒரு அதிகாரி இந்த கோயில் பூக்காமல் அகற்ற உத்தரவிட்டிருக்கிறார். அடுத்த நாள் அவருக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்த மக்களின் அறிவுரைபடி கோயில் அகற்றம் உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டு முனீஸ்வரரை வணங்கிய உடன் குணமானார் இந்த சம்பவத்திற்கு பிறகே அங்கு முனிஸ்வரர் பிரபலம் அடைந்தார்.

சென்னை நகரின் பல பிரபலமான கோயில்களில் இந்த கோயில் மிக முக்கியமான ஒன்று. இங்கு முனீஸ்வரனை குலதெய்வமாக வணங்குபவர்கள் தலையை மொட்டை அடித்து வேண்டுதல் செய்கிறார்கள் , 

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் அழைப்பிதழ்களை முனீஸ்வரன் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகே மற்றவர்களுக்கு வணங்குகிறார்கள்.பூஜையின் போது எலுமிச்சை சுருட்டு சிலர் வேண்டுதலுக்கு ஏற்ப மதுபானங்கள் வைத்தும் வழிபடுகிறார்கள்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP