உங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள், குணத்தை நாங்கள் சொல்கிறோம்!! பகுதி 2!!
ஆயில்யம் முதல் ரேவதி வரை
ஆயில்யம்:
ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணனின் நட்சத்திரம் ஆயில்யம். எவ்வளவு மோசமான வறுமைநிலையில் பிறந்திருந்தாலும், எப்படியும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையைஅடையும் பாக்கியம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு. பிறருக்கு உதவி புரிவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். விவசாயம் சார்ந்த தொழில்கள், நீதித்துறை, கலைத்துறை போன்றவற்றில் ஆயில்ய நட்சத்திரத்தினர் ஜொலிப்பார்கள்.
மகம்:
மற்றவர்களை அனுசரித்துச் செல்வதிலும், சூழ்நிலைக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்வதில் கில்லாடிகள் மக நட்சத்திரத்துக்காரர்கள். எவ்வளவுதான் செல்வாக்கும் வசதியும் இருந்தாலும் இவர்களின் மனதில் பெரும்பாலும் மண வாழ்க்கைப் பற்றிய தெரியாத கவலை இருக்கும். தலைமைப் பதவிக்கு தகுந்தவர்கள். முடிவுகளை விரைந்து எடுக்க முடியாமல் சில நேரங்களில் தவித்திடும் குணம் கொண்டவர்கள். அரசியல், தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்
பூரம்:
பரந்த மனப்பான்மை கொண்ட பூர நட்சத்திரக்காரர்கள் பிறருக்கு வலியப்போய் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்கள் தொழிற்சாலைகள், உணவு விடுதி, விவசாயம், வியாபாரம் அரசுத்துறை ஆகிய தொழில்கள் அமைய வாய்ப்புகள் அதிகம்,
உத்திரம்:
சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருக்கும் உத்திர நட்சத்திரத்தினர் வாழ்க்கையில் லட்சியத்துடன் முன்னேற விரும்புபவர்கள். நாணயமானவர்கள் . அதீத பக்தி உணர்வுடையவர்கள். நன்றி மறவாதவ குணம் கொண்ட இவர்கள் கடல் சார்ந்த தொழில்கள், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
அஸ்தம்:
நன்மைகள் செய்வதே வாழ்வின் தவப்பயன் என்று வாழும் அஸ்த நட்சத்திரக்காரர்கள் , அனைவருக்கும் நன்மைகள் செய்வர்.அதே நேரம் பிறரும் தங்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகம் எதிர்பார்ப்பு உள்ளவர்கள் இவர்கள்.அடிப்படையில் இந்த நட்சத்திரனர் பெரும்பாலும் கலாரசிகர்களாகவும் ,ஆபரண பிரியர்களாகவும் விளங்குகின்றனர்.பொதுவாக கலைத்துறை, வியாபாரம், பதிப்புத்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
சித்திரை:
அடிப்படையில் தலைமைப் பண்பும் சிறந்த ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அடுத்தவருக்கு ஆபத்து என்றால், உடனே ஓடோடிச் சென்று உதவி செய்யும் குணம் படைத்தவர்கள்.பெருமளவில் தெய்வ பக்தி மிகுந்தவர்களாக திகழ்வார்கள்.ஜோதிடம் ,நீதித்துறை, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
சுவாதி:
சுதந்திரமாக வாழ விரும்பும் சுவாதி நட்சத்திரக்காரர்கள் அன்புக்குக் கட்டுப்படுவார்கள் ஒரு நாளும் அதிகாரத்துக்கு அடிபணியமாட்டார்கள். சுகபோகியான இவர்கள் பழக இனியவர்கள் .காவல் துறை ,அரசு நிர்வாகம், உணவு விடுதி , அலங்காரப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றில் கொடிகட்டிப்பறப்பார்கள் இவர்கள்.
விசாகம்:
மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். நிர்வாகம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் மீண்டு வந்துவிடுவார்கள். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் முயற்சி செய்து முன்னேறிவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். மற்றபடி கல்வித்துறை, பதிப்பகம் போன்ற துறைகளில் ஈடுபடுவர்
அனுஷம்:
மற்றவர்களிடம் அதிக அன்பு செலுத்தும் அனுஷ நட்சத்திரக்காரர்கள் பல நற்பண்புகளைக் கொண்டிருப்பார்கள். எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து இறுதியில் வெற்றி பெறும் திறமையாளர்கள்.பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். சிலர் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபடுவர்.நேர்மையானவர் அந்தஸ்து மிக்கவர் அமைதியானவர் என்று பலராலும் பாராட்டு பெருபவர்கள் இவர்கள்.
கேட்டை:
உண்மையாக இருப்பதுடன் மற்றவர்களும் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கும் கேட்டை நட்சத்திரத்தினர் தெய்வபக்தி மிக்கவர்கள். சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பத்திரிகைத்துறை, ராணுவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள
மூலம்:
தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறமை படைத்தவர்கள் மூலம் நட்சத்திரக்காரர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள் பார்மசி, விவசாயம் சார்ந்த தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.சிலர் கல்வித்துறையிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.
பூராடம்:
தன்னம்பிக்கை நிறைந்தவர்களான பூராட நட்சத்திரக்கார்கள் ஒருவர் கஷ்டப்படுவதாகத் தெரிந்தால்,ஓடிச்சென்று உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள்.வாக்குவாதத்தில்வல்லவர்கள் அதே நேரம் தங்கள் கடமையில் கருத்தாக உள்ளவர்கள் இவர்கள்.
உத்திராடம்:
கலையில் ஆர்வமும் துணிச்சலும் மிகுந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் இவர்களுக்கு அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடமைகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மருத்துவம், கல்வி, வங்கி, ஆன்மிகம் சார்ந்த துறைகளில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
திருவோணம்:
மக்களின் அன்பும் ஆதரவும் பெற்றிருக்கும் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சாதுர்யமான அறிவைப் பெற்றிருப்பார்கள். நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் நட்சத்திரங்கள் திருவாதிரையும் திருவோணமும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடவுள் பக்தி நிறைந்தவர்களான திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுரங்கம், பெட்ரோலியம், இயந்திரத் தொழில் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.
அவிட்டம்:
தவறாமல் நீதி நேர்மையைக் கடைப்பிடிக்கும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்க அஞ்சமாட்டார்கள். தலைமை தாங்கும் தகுதி பெற்ற இவர்கள் காவல்துறை, ராணுவத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, இரும்புத்தொழில், பிரிண்டிங் போன்ற தொழில்களில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்.கடமை தவறாத குணம் கொண்டவர்கள் அவிட்ட நட்சத்திரக்காரர்கள்.
சதயம்:
வசீகரமான சதயம் நட்சத்திரக்கார்கள் திறமையாக செயல்படுபவர்கள். மிகுந்த ஒழுக்கமுடையவர்கள்.பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். மனதில் இனம் தெரியாத கவலையோ சஞ்சலமோ இவர்களை அவ்வப்போது வாட்டி எடுக்கும். ஆனால், இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும் தெய்வ பக்தியினால் உடனே சமாளித்துக்கொள்வார்கள். வானியல் ஆராய்ச்சி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
பூரட்டாதி:
இரக்க சுபாவம் கொண்ட பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அதிக நிர்வாகத் திறமை கொண்டவர்கள். குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்கள்அடிக்கடி எதையாவது நினைத்து கவலைப்படுவது இவர்களது வாடிக்கை. கல்வியறிவில் சிறந்து விளங்கும் இவர்கள் கல்வித்துறை மற்றும் வங்கி சார்ந்த பணிகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள்.
உத்திரட்டாதி:
சாதுர்யமாகப் பேசும் திறன் படைத்த உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களான இவர்களில் பலர்ஆபரணபிரியர்கள் தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும் திறமையும் அதிக உள்ளவர்கள். சுரங்கம், இயந்திரங்கள், இரும்புபொருட்கள், உணவு விடுதி போன்றவை இவர்களுக்கு உரிய தொழில்களாம்.
ரேவதி:
துணிச்சலும் நேர்மையும் கொண்ட ரேவதி நட்சத்திரக்காரர்கள் சுகபோகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.அதிகம் தற்புகழ்ச்சி விரும்புபவர்கள் அதே நேரம் பழக இனியவர்கள்.கல்வி அறிவும், அனுபவ அறிவும் நிரம்பப் பெற்ற இவர்கள், எல்லோருக்கும் நன்மையை மட்டுமே நினைப்பவர்களாக இருப்பார்கள். நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.
newstm.in