தைப்பூச நன்னாளில் பாராயணம் செய்ய சண்முகன் மந்திரம்
தைப்பூச நன்னாளில் பாராயணம் செய்ய சண்முகன் மந்திரம்
Jan 31, 2018, 18:57 IST
| தைப்பூச நன்னாளில் குமரப் பெருமானின் பேரருளை பெறவும், வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளவும், இந்த சண்முகன் மந்திரத்தைப் பாராயணம் செய்வோம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும்.
சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்
பவாய பர்காய பவாத்மஜாய
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகாரரூபாய நமோ குஹாய
பொருள் :
மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம்.
newstm.in