சரவணபவ என கூறுங்கள்: 6 பலன்களை பெறுங்கள்!
‘சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி, எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
முருகன் கோவில்களில் பெரும்பாலும் வேங்கைமரம் தலவிருட்சமாக இருக்கும். முருகன் – வள்ளி திருமணத்தில் வேங்க மரம் முக்கிய இடம் பெறுகிறது. இம்மரம் தனிச்சிறப்பு உடையது. தெய்வீக அருள்பெற்ற மரம்.
முருகனருள் பெற்ற இம்மரத்தின் துண்டுகளை நீரில் நனைய வைத்து அந்நீரை வெயிலில் காயவைத்து வெற்றிக்கு இடும் பொட்டு செய்து வந்தார்கள் என்ற குறிப்பும் உண்டு. இது கெடுதல் விளைவிக்காது.
இந்த நீரை குடித்தால் வலிமையான நோயற்ற உடல்நலம் உருவாகும். இம்மரம் பாதுகாப்பு கவசம் போன்றது.
newstm.in
newstm.in