Logo

விளக்கை தண்ணீரால் ஒளிர வைத்த சாய்பாபா!

சாய்பாபா நிகழ்த்திய அற்புதத்தில் இதுவும் ஒன்று. ஷீரடியில், ஒரு நாள் மசூதியில் தங்கியிருந்த சாய்பாபா, மண் விளக்குகளில் தினமும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வருவார் . அதற்கு அங்கிருந்த எண்ணெய் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி ஊற்றுவார் . இது சாய்பாபாவின் வழக்கம்.
 | 

விளக்கை தண்ணீரால் ஒளிர வைத்த சாய்பாபா!

சாய்பாபா நிகழ்த்திய அற்புதத்தில் இதுவும் ஒன்று. ஷீரடியில், ஒரு  நாள்  மசூதியில் தங்கியிருந்த சாய்பாபா, மண் விளக்குகளில் தினமும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வருவார் . அதற்கு அங்கிருந்த எண்ணெய் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி ஊற்றுவார் . இது சாய்பாபாவின் வழக்கம்.

அங்கிருந்த எண்ணெய் வியாபாரிகளுக்கோ சாய்பாபா மீது ஒரு பொறாமை அல்லது  வெறுப்பு ஏற்பட்டது.  அதற்குக் காரணம் , பலரும் அவரை ஒரு மகானாக நினைத்துப் பேசுவது தான். சாய்பாபாவை வெறுப்பேற்ற வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது.  அதற்காக ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை நடத்த நினைத்தனர். ஒரு நாள் சாய்பாபா எண்ணெய் வாங்க வந்த போது அந்த வியாபாரிகள் தங்களுக்குள் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி “,எண்ணெய் இல்லை தீர்த்து போய்விட்டது" என்று கூறினர் .

எண்ணெய் கொடுக்கவில்லை என்றால் விளக்கேற்றுவதற்கு இந்த சாய்பாபா என்ன செய்கிறார் பார்க்கலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு . சாய்பாபாவும் அதற்காக அத்தனை வருத்தமோ , கவலையோ படாமல் அவர்பாட்டுக்கு மசூதிக்குச் சென்றார். வழக்க போல பூஜைக்கான தனது அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இந்த வியாபாரிகளும் எண்ணெய் இல்லாததால் விளக்கேற்ற முடியாமல் அவர்படும் அவஸ்தையைக் கண்டு ரசிக்க அவரைப் பின் தொடர்ந்து போயினர் .

சாய்பாபாவோ தான் எண்ணெய் வாங்குவதற்காகப் பயன்படுத்தும் அந்தப் பாத்திரத்தை எடுத்தார். அதில் தான் குடிப்பதற்காக வைத்திருக்கும் தண்ணீரை நிரப்பினார். அதனை அத்தனை விளக்குகளிலும் ஊற்றினார். இதனைப் பார்த்த அந்த வியாபாரிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. " என்ன செய்கிறார் இந்த சாய்பாபா?  இவருக்கு என்ன புத்தி சரியில்லையா ?" என்று தங்களுக்குள் குழப்பமாகக் கிசுகிசுத்தனர்.

சாய்பாபாவோ எண்ணெய்க்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றி , விளக்குத் திரியைப் பற்ற வைத்தார். அந்த விளக்குகள் அனைத்தும் எண்ணெயில் எரிகிற மாதிரி சுடர் விட்டு எரிந்தது. வியாபாரிகள் வாயடைத்துப் போயினர் .
இது எப்படிச் சாத்தியம் ? அப்படியானால் இந்த சாய்பாபா, நாம் நினைப்பது போல கிறுக்கன் அல்ல.  பலரும் சொல்வது போல மகானே தான்.  இவரிடம் போய் விளையாடி விட்டோமே !" என்ற வருத்தம் அவர்களை வறுத்தி  எடுத்தது . நேராக சாய்பாபாவின் பாதங்களில் விழுந்து தங்களை மன்னித்தருளுமாறு வேண்டினர் .

அப்போது சாய்பாபா, “என்னைச் சோதிக்க விரும்பினீர்கள் . அது தவறில்லை. ஆனால்,  நான் எண்ணெய் இல்லாமல் எப்படித் தவிக்கிறேன் என்பதை ரசிப்பதற்காகப் பின்தொடர்ந்து வந்தீர்களே, அது மிகப்பெரிய தவறல்லவா! இதுபோன்ற பாவ காரியத்தை இனிமேலும் தொடராதீர்கள் " என்று புத்திமதி கூறினார்.  பிறகு, தண்ணீரில் விளக்கெரிய வைத்த சாய்பாபாவின் அற்புதம் அனைவருக்கும் தெரியவந்தது. அதிசயித்துப் போயினர்.
                               ஓம்ஸ்ரீசாய்ராம்!!!!

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP