சாய் பாபா கதைகள் !!

சாய்பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பி ஒரு சாமியார் "ஆலந்தி" யிலிருந்து சீர்டிக்கு வந்தார்.தன் காதிலுள்ள கடுவையான வலியால் அவர் அல்லலுற்றார். அது அவரைத் தூங்கவிடாமல் தடை செய்தது. இதற்காக அவர் ரண சிகிச்சை செய்யப்பட்டார். ஆனால், அது அவருக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை. இவ்வலி மிகவும் கடினமானதாய் இருந்தது.
அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் திரும்பிச் செல்லும் போது சாய்பாபாவின் அனுமதியைப் பெற வந்தார்.
அப்போது சாமா, சுவாமிகளின் காது வலிக்கு எதாவது செய்யுமாறு சாய்பாபாவை வேண்டினார்."அல்லா அச்சா கரோகா" என்று கூறித் தேற்றினார். பிறகு சுவாமிகள் பூனாவுக்குத் திரும்பினார்.
ஒரு வாரம் கழித்து ஷீரடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பினார். அதில் தனது காது வலி மறைந்து விட்டது என்றும், வீக்கம் இருந்தது என்றும் அவ்வீக்கத்தைப் போக்குவதற்காக மும்பைக்கு, ரண சிகிச்சை செய்து கொள்ளச் சென்று இருத்ததாகவும், ஆனால், டாக்டர் காதை சோதித்து விட்டு ரண சிகிச்சை தேவையில்லை என கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். சாய்பாபாவின் மொழிகளுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கிறது.
டாக்டர் வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.