Logo

சாய் பாபா கதைகள்

 | 

பூனாவை சேர்ந்த கோபால் ஆம்ப்டேகர் என்பவர் சாய்பாபாவின் பக்தர். அவர் தாணா ஜில்லாவில் எக்ஸைஸ் டிபார்ட்மெண்டில் பத்து ஆண்டுகளும், பின் ஜவ்ஹர் ஜில்லாவில் பணியாற்றிய பிறகு அங்கிருந்து ஓய்வு பெற்றார். வேறு ஒரு வேலை பெறுவதற்காக அவர் முயற்சித்தார். ஆனால், முடியவில்லை. மற்ற கேடுகளால் அவர் தாக்கப்பட்டு அவரது, நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து, கொண்டே வந்தது.

இதே நிலைமையில் ஷீரடிக்கு, ஒவ்வோர் ஆண்டும் சென்று தனது கவலைகளை சாய்பாபாவின் முன் சமர்ப்பிப்பதுமாக அவர் ஏழாண்டுகள், கழித்தார். 1916-ல் அவரது நிலைமை மோசமாகி, ஷீரடியிலேயே தற்கொலை செய்து கொள்ளுவது என அவர் தீர்மானித்தார். எனவே, தன் மனைவியுடன் சீரடிக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கிருந்தார்.

ஒருநாள் தீக்ஷித் வாடாவின் முன்னால் உள்ள மாட்டு வண்டில் அவர் அமர்ந்து கொண்டிருக்கும் போது பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில், குதித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அவர் தீர்மானித்து விட்டார்.அவர் ஒரு மாதிரியாக எண்ண,சாய்பாபா வேறொரு விதமாக நடப்பித்தார். இந்த இடத்திற்கு சில அடி தூரத்தில் இருந்த ஒரு ஓட்டல் முதலாளியும் சாய்பாபாவின், அடியவருமான சகுண் என்பவர் வெளியே வந்து அவரிடம், "அக்கல்கோட்" மஹாராஜின் இச்சரித்திரத்தை நீங்கள் எப்போதாவது படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். ஆம்ப்டேகர் அவரிடமிருந்து அந்நுலை வாங்கிப் படிக்கத் தொடங்கினார். எதேச்சையாக அல்லது தெய்வாதீனமாக்க் கீழ்கண்ட ஒரு கதையை அவர் படிக்கத் தொடங்கினார். " அக்கல்கோட் மஹாரஜின் அடியவன் ஒருவன் தீர்க்கப்படமுடியாத ஒரு வியாதியால் மிகவும் அல்லலுற்றுக் கொண்டிருந்தவன்,

அந்த வேதனையை மேற்க்கொண்டு தங்க முடியாமற் போகவே அவன் மனம் உடைந்து,தனது தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவிற்கு கொண்டு வர ஒரு நாள் நள்ளிரவு  கிணற்றில் குதித்து விட்டான். உடனள மகராஜ் அங்கு வந்து தன் கரங்களாலேயே வெளியே எடுத்து" நல்லதோ கெட்டதோ உன் முந்தைய கருமத்தின் பயனை நீ அடைந்ததாக , அனுபவுத்தாக வேண்டும். அந்த அனுபவித்தால் பூரணமெய்த வில்லையானால் தற்கொலை உனக்கு உதவி அளிக்காது. மீண்டும் ஒரு பிறவி எடுத்து அக்கஷ்டத்தை யே அடைய வேண்டும். எனவே உன்னை நீயே கொன்று கொள்வதற்குப் பதிலாக ஏன் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டுவிட்டு முந்தைய கருமத்தின் பலன்களை எல்லாம் ஒரேடியாகத் தீர்த்து முடித்து விடக்கூடாது?.


இந்த பொருத்தமான, தக்க சமயத்தில் கிடைத்த கதையைப் படிந்து விட்டு ஆம்ப்டேகர் மிகவும் ஆச்சரியப்பட்டார். உள்ளம் உருகினார். சாய்பாபாவின் குறிப்பை இக்கதையின் மூலம் அவர் பெற்றிருக்கா விட்டால், அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார். சாய்பாபாவின் வியாப்பித்துவத்தையும், தயாளத்தையும் அவர் கண்டு, சாய்பாபா மேலுள்ள நம்பிக்கை அவருக்கு உறுதியாகி, அவர் சாய்பாபாவின் பெரும் பக்தராகி விட்டார் . சாய்பாபா பக்தராகி விட்டார். அவரின் எதிர்காலம் சிறப்புற தொடங்கியது. பின்னர் ஜோதிடம் படித்து அதில் திறமை பெற்றுத் தனது செல்வத்தைப் பெருக்கினார்.  போதுமான பணத்தை சம்பாதிக்க அவரால் இயன்று, தனது பிற்கால வாழ்வை சௌகரியமாகவும், வசதியாகவும் கழித்தார்.


டாக்டர் வி. ராம்சுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP