சாய் பாபா கதைகள் !! (தேளும் , பாம்பும்)
சாய்பாபாவின் நெருங்கிய பக்தரான காகாஸாகஹேப் தீக்ஷித் சாய்பாபாவின் பரித்துரையின் பேரில் ஸ்ரீஏகநாதமஹாராஜின் இரண்டு நூல்களைப் பாராயணம் செய்து வந்தார். அதாவது, பாகவதமும், பாவர்த்த ராமாயணமுமாகும். அவைகள் பாராயணம் செய்யப்படும் போது கேட்டுக் கொண்டிருந்த நல்லதிர்ஷ்டம் பெற்ற மக்களில் ஹேபாட்பந்தும் ஒருவராவார். தமது தயாரின் அறிவுறைப்படி ஹனுமான் ராமரின் பெருமையைச் சோதிக்கும் கட்டம் படிக்கப்பட்டப்போது அனைவரும் மந்திரத்திருக்குக் கட்டுப்பட்டவர்கள்போலகேட்பதில் மூழ்கியிருந்தனர்.
ஹேமாட் பந்த்தும் அவர்களிள் ஒருவர். அப்போது ஒரு பெரிய தேள்( அது எங்கிருந்து வந்ததென்று யாரும் அறியவில்லை) ஹேமாட் பந்த்தின் வலது தோள் மேலுள்ள அவரது மேல் துண்டின் மீது தவ்வியது. முதலில் அது கவனிக்கப்படவில்லை. ஆனால், கடவுள் தமது கதைகளை ஆர்வத்துடன் கேட்பவர்களைப் பாதுக்காக்கிறார். எனவே, ஹேமாட்பந்த் தற்செயலாகத் திரும்பி, பெரிய தேளை தோள் மீது கண்டார். அது மரண அமைதியுடன் இருந்தது. இப்பக்கமோ அப்பக்கமோ சிறிதும் அசையவில்லை.
அதுவும் பாராயத்தைக் கேட்டு மகிழ்வது போன்றே தோன்றியது. பின்னர், ஹேமாட்பந்த் கடவுளருளால், அவை யோரைத் தொந்தரவு செய்யாமல் வேட்டியின் இரு முனைகளையும் எடுத்துத் தேளை உள்ளே மடித்துக் கொண்டார். பின்னர் அவர் வெளியே சென்று அதைத் தோட்டத்தில் எறிந்தார்.
மற்றுமொரு முறை, ஒருநாள் சிலர் காகாஸாஹேப் வாடாவின் மாடியில் அந்தி சாய்வதற்குச் சிறிதே முன்பாக உட் கார்ந்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பாம்பு ஜன்னல் நிலையிலுள்ள துவாரத்தின் வழியாக ஊர்ந்து வந்து சுருட்டிக் கொண்டு அமர்ந்து, விளக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. முதலில் அது மிரட்சி அடைந்த போதும் அமைதியாக அமர்ந்து தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்தது. பின்னர், பலர் கம்புகளுடனும், தடிகளுடனும் ஓடி வந்தனர். அது ஒரு இடக்குமுடக்கான இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தமையால் ஒரு அடியும் அதன்படி படவில்லை. மனிதர்களின் சப்தங்களைக் கேட்டுப் பாம்பு, தான்வந்த துவாரம் வழியாகவே விரைவாகத் திரும்பிச் சென்று விட்டது. பின்னர் அங்கிருந்த அனைவரும் கவலையை விடுத்தனர்.
டாக்டர் வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.