Logo

பக்தரிடம் உரிமையோடு தட்சணை வாங்கிய சாய்பாபா - பாகம்.12

“அவஸ்தே” என்ற பக்தர் ஒருவர் தன் மனைவி மற்றும் மகனுடன் சாய்பாபாவைத் தரிசிக்க ஒரு சமயம் ஷீரடிக்கு வந்திருந்தார் . அவர் இன்டோர் சமஸ்தானத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார் .
 | 

பக்தரிடம் உரிமையோடு தட்சணை வாங்கிய சாய்பாபா - பாகம்.12

“அவஸ்தே”  என்ற பக்தர் ஒருவர் தன் மனைவி  மற்றும் மகனுடன் சாய்பாபாவைத் தரிசிக்க ஒரு சமயம் ஷீரடிக்கு வந்திருந்தார் . அவர் இன்டோர் சமஸ்தானத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார் . அவரது மகனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது . திருமணச் செலவிற்காகத் தன்வசம்  400 ரூபாய் வைத்திருந்தார்.  அவஸ்தேயின் மனைவி 300 ரூபாய் வைத்திருந்தார்.

 சாய்பாபாவைப் பக்திப்பரவசத்துடன் . தரிசனம் செய்தனர் . அப்போது திடீரென்று சாய்பாபா, "எனக்கு தட்சிணை கொடுப்பீர்களா? என்று கேட்டார் .
இதனை எதிர்பார்க்காத அவஸ்தே ," சாய்பாபா கேட்டு மறுக்க முடியுமா? கண்டிப்பாகத் தருகிறேன் " என்றார் . "30 ரூபாய் தட்சிணை கொடு" என்றார்  சாய்பாபா. உடனே ,அப்படியே எடுத்துக் கொடுத்தார் அவஸ்தே . அப்புறம் அவஸ்தேயின் மனைவியைப் பார்த்து, "நீங்களும் கொடுப்பீர்களா?" என்று கேட்டார் சாய்பாபா. எப்படி மறுக்க முடியும்? சம்மதித்தார் அவஸ்தேயின் மனைவி.  அப்படியே கேட்ட பணத்தையும் கொடுத்தார்.

இப்படி இருவரிடமும் மாறிமாறி தட்சிணைப் பெற்றார் சாய்பாபா . சரியாக அவர்களிடம் இருந்த அத்தனை பணத்தையும் பெற்ற பிறகு , அவர்களிடம் தட்சிணை கேட்பதை நிறுத்தி க் கொண்டார் சாய்பாபா.

சாய்பாபா கேட்டு தட்சிணை கொடுத்ததால் மனம் முழுவதும் மகிழ்ச்சி அலை அடித்தாலும் , தங்கள் இருவரிடமும் இருந்த அத்தனை பணமும் தட்சிணை கொடுக்கப்பட்டுவிட்டதால் , தற்போது ஊருக்குத் திரும்பிச் செல்லக்கூட காச எதுவும் இல்லாதது அவஸ்தேயின் மனதை கவலை அடையச் செய்தது. துக்கம் சுனாமியை உள்ளுக்குள் அடிக்க ,சாய்பாபாவிடம் விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தார் அவஸ்தே.

அப்போது, சாய்பாபாவின் நெருங்கிய பக்தரான ஜோக்,  அவஸ்தேயைத் தட்டிக் கொடுத்து குஷிப்படுத்தினார் . சாய்பாபா உங்களிடம் இருந்து ஏராளமாகத் தட்சிணைப் பெற்றுக்கொண்டதால் நீங்கள் பெரும் யோகம் செய்தவராகி விட்டீர்கள்  .நிறையப் பேர்  தட்சிணை கொடுத்தும் ஏற்காமல் திருப்பி அனுப்பிவிடும் சாய்பாபா உங்களிடம் இப்படிக் கேட்டு வாங்கி இருப்பதால் நீங்கள் பெருமைக் குரியவர்களாகி இருக்கிறீர்கள்.  பெரும் அதிர்ஷ்டசாலி . பொதுவாக அவர் வாங்கும் தட்சிணைக்கு பத்து மடங்கு அதிகமாகத் திருப்பிக் கொடுக்கும் மணம் படைத்தவர் சாய்பாபா " என்று மகிழ்ச்சியிடன் கூறினார்  ஜோக் .

ஆனால் இந்த மகிழ்ச்சியில் திளைக்கும் மனமில்லாமல் வருத்தத்துடன் காணப்பட்டார் அவஸ்தே.
"சந்தோஷப்படாமல் ஏன் சங்கடத்துடன் காட்சியளிக்கிறீர்கள்?  என்ன பிரச்னை ?" என்று கேட்டார் ஜோக்.

"அத்தனை பணத்தையும் சாய்பாபா வாங்கிக் கொண்டார் இப்போது கையில் சுத்தாமாகக் காசே இல்லை .ஊருக்குத் திரும்பிப்போக வேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று ,துக்கம் தொண்டையை அடைக்க மெலிதாக பேசினார் அவஸ்தே.
"உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது ?"

"அவசியம் நூறு ரூபாய் வேண்டும்".

" சரி கவலைப்படாதீர்கள் . பம்பாய் வியாபாரி ஒருவனுக்கு தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட இருந்தது. சாய்பாபாவிடம் வந்து புலம்பி அழுதான் . தனக்கு நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்தால் ,கிடைக்கும் லாபத்தில் நான்கில் ஒரு பங்கு தருவதாக வாக்களித்திருந்தான் அதுபோலவே சாய்பாபா, அவனுக்கு நஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொண்டார். அவனும் வாக்களித்தவாறே சாய்பாபாவிடம் ஆறாயிரம் ரூபாய் பணத்தை அள்ளி கொடுத்து விட்டுப் போய்விட்டான் . அந்தப் பணத்தில் மூவாயிரம் ரூபாய் இதுவரை செலவாகி இருக்கிறது. மிச்சப் பணம் அப்படியே கோணிப்பையில் இருக்கிறது அதிலிருந்து நூறு ரூபாய் எடுத்து உங்களுக்குத் தருகிறேன். ஏனென்றால் ,சாய்பாபா அதற்கெல்லாம் கணக்கு கேட்பது கிடையாது "என்று கூறிய ஜோக், அப்படியே பணத்தை எடுத்து அவஸ்தேயிடம் கொடுத்தார்.

அப்போது அவஸ்தேயிடம்" உங்களிடம் இருந்து சுமார் அறுநூறுக்கும் மேலான பணத்தை சாய்பாபா பெற்றுக் கொண்டதால் ,இன்று முதல் உமது சம்பளம் மாதம் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் வீதம் அதிகரிக்கும்"என்றார் ஜோக்.

அதனைக் கேட்டு ஏளனமாகச் சிரித்த அவஸ்தே "எனக்குச் சம்பளம் உயர வாய்ப்பே கிடையாது, ஏனென்றால் எங்கள் அலுவலகத்தில் இருக்கும் உயரதிகாரிகள் யாரும் எனக்கு உதவி செய்வதில் ஆர்வம் இல்லாதவர்கள் என்றார் .ஆனால் அதற்கு ஜோக் பதிலேதும் கூறவில்லை காரணம் சாய்பாபாவின் மகிமை இவருக்கு த் தெரியவில்லை என்றே நினைத்தார். அப்புறம் ஊர் திரும்பிய  அவஸ்தே மறுநாள் அலுவலகம் சென்றார் . என்ன ஒரு ஆச்சர்யம் ! அவருக்கு நடப்பு மாதம் முதல் சம்பளத்தில் ஐம்பது ரூபாய் அதிகரித்திருப்பதாகக் கடிதம் கொடுக்கப்பட்டது. 
சாய்பாபாவின் அற்புதம் தொடரும்!!!!   ஒம் ஸ்ரீ சாய்ராம்.

பக்தரிடம் உரிமையோடு தட்சணை வாங்கிய சாய்பாபா - பாகம்.12
    வி. ராமசுந்தரம்
  ஆன்மீக எழுத்தாளர்
 EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP