சபரிமலைக்கு யாரும் வர வேண்டாம்!! தேவசம் போர்டு அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு இறங்கியுள்ளது. இதனால் மார்ச் 14ம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை சபரிமலைக்கு பக்தர்கள் மாத பூஜைக்கு யாரும் வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
Mar 11, 2020, 00:47 IST
| கொரோனா வைரஸ் தாக்கதால் , கேரளாவில் ஏற்கனவே 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , மேலும் 6 பேர் தற்போது பாதிக்கப்பட்டு 12 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு இறங்கியுள்ளது. இதனால் மார்ச் 14ம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை சபரிமலைக்கு பக்தர்கள் மாத பூஜைக்கு யாரும் வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கொரொனா வைரஸ் பரவும் அச்சம் உள்ளதால் மக்கள் ஒன்றாக அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் . இது ஒரு புறம் இருக்க கேரளாவில் பறவைக் காய்ச்சலின் தாக்கமும் ஆரம்பித்துள்ளது. இதனால் அம்மாநிலம் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது
newstm.in