Logo

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபடலாம் !!

 | 

ஒவ்வொரு அமாவாசைக்கு 3 நாட்கள் முன்னதாகவும் பெளர்ணமிக்கு 3 நாட்கள் முன்னதாகவும் பிரதோஷகாலம் வரும். பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு உகந்த , சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாள்.

மாதந்தோறும் வரும் சிவராத்திரி நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். அந்தநாளில் சிவ பாராயணம் செய்து பிரார்த்தனை செய்வார்கள். அதேபோல , மாதந்தோறும் வருகிற இரண்டு பிரதோஷத்தின் போதும் சிவ வழிபாடு செய்வார்கள்.

சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பார்கள். பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள நேரம். இந்த நேரத்தில், சிவனாருக்கு எந்த அளவுக்கு அபிஷேகமும் ஆராதனைகளும் அமர்க்களப்படும்.

அதேபோல் நந்திதேவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்களுக்கான பொருட்களை பக்தர்களே வழங்குவார்கள். இந்த அற்புதமான நாளில் , மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள்.

சிவ நாமங்களைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். சிக்கல்களையெல்லாம் தீர்த்து வைப்பார் சிவனார். கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP