Logo

வீட்டில் இந்த தண்ணீரை தெளித்தால் , எந்த கெட்ட சக்தியும் இருக்காது !!

 | 

வீட்டில் பூஜை அறையில் கடவுளை வணங்கும் போது , தற்போது யாரும் வெற்றிலையை பயன்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு வெற்றிலை வைத்து வணங்கும் போது பல நண்மைகள் உண்டாகிறது என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

வெற்றிலையோடு சேர்த்து அந்த தீர்த்தத்தில் போட வேண்டிய பொருட்கள் என்னென்ன ? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் ,

இந்த வெற்றிலையோடு நன்னாரிவேர் 2 துண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பச்சைகற்பூரம் ஒரு சிறிய துண்டு, ஜவ்வாது தூள் ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் சேர்க்கப் போகின்றோம். உங்கள் வீட்டில் பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தமான நீரை ஊற்றி அதில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் போட்டு விடவேண்டும். நறுமணம் மிக்க இந்த தண்ணீருக்குள், வெற்றிலைக்காம்பு மேல் பக்கத்தில் இருக்கும் படி, வெற்றிலை ஒன்றை தண்ணீரில் மூழ்க வைத்து விடுங்கள்.

இதை எப்போது செய்ய வேண்டும் ? வெள்ளிக்கிழமை காலை மகாலட்சுமி பூஜை செய்யும்போது இந்த சொம்பை தயார் செய்து, மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து, பூஜை செய்ய வேண்டும்.

மாலை பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு , அந்த சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து, அந்த வெற்றியினால் உங்கள் வீட்டு மூலைமுடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.

சமையலறை, படுக்கையறை வரவேற்பறை இப்படி உங்கள் வீட்டில் எவ்வளவு அறைகள் இருக்கின்றதோ! அந்த அறைகள் முழுவதிலும் இந்த தண்ணீர் படும் அளவிற்கு தெளித்து விட்டீர்கள் என்றால் ,

மூதேவி உங்கள் வீட்டில் வாசம் செய்யவே மாட்டாள். நறுமணமிக்க இந்த தீர்த்தமானது வீட்டில் சந்தோஷத்தை நிலையாக வைத்திருக்கும். பணக்கஷ்டம் ஏற்படாது. மனக்கஷ்டம் ஏற்படாது. சண்டை சச்சரவு ஏற்படாது. நோய் நொடிகள் இல்லாத வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு சிறந்த முறை.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP