Logo

நாளை மகா சிவராத்திரி!! எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும்!!

மேஷ ராசிக்காரர்கள் வெல்லம் கலந்த நீரால் அபிஷேகம் செய்திட மேன்மை அடைவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்திட பணப் பிரச்சனைகள நீங்கும். மிதுன ராசிக்காரர்கள் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்திட வாழ்வில் வளம் பெருகும்.
 | 

சிவராத்திரி!! இந்த ராசிக்காரர்கள் இப்படி அபிஷேகம் செஞ்சா செல்வ வளம் பெருகும்!!

மகா சிவராத்திரி நாளை வெள்ளிக்கிழமை 21-2-2020ல் கொண்டாடப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களிலும் நான்கு கால அபிஷேகம் நடைபெறும். இரவு முழுவதும் பூஜை ,ஆராதனை, வேத மந்திரங்கள் ஆலயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். நம்மால் இயன்ற அளவு அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவரவர் ராசிக்குரிய பொருட்களை அபிஷேகத்திற்காக சிவபெருமானுக்கு வழங்கிட மேலும் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

                                                   சிவராத்திரி!! இந்த ராசிக்காரர்கள் இப்படி அபிஷேகம் செஞ்சா செல்வ வளம் பெருகும்!!

மேஷ ராசிக்காரர்கள்  வெல்லம் கலந்த நீரால் அபிஷேகம் செய்திட மேன்மை அடைவார்கள்.
ரிஷப  ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்திட  பணப் பிரச்சனைகள நீங்கும்.
மிதுன ராசிக்காரர்கள் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்திட வாழ்வில் வளம் பெருகும்.
கடக ராசிக்காரர்கள்  சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்திட எல்லா நலமும் கிடைக்கப் பெறுவார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் சுத்தமான பசுவின் பால் கொண்டு  அபிஷேகம் செய்திட வாழ்வு சிறக்கும்.
கன்னி  ராசிக்காரர்கள்  பால் கொண்டு அபிஷேகம் செய்திட நினைத்த காரியம் நிறைவேறும்.
துலாம் - பசும் பாலால்  அபிஷேகம் செய்திட தொழிலில் மேன்மை அடைவார்கள்.
விருச்சிகம்  ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்திட வாழ்க்கை இனிமையாகும்.
தனுசு  ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்திட பணப்பிரச்சினை நீங்கும்.
மகர  ராசிக்காரர்கள்  நல்லெண்ணெய் அபிஷேகம் செய்திட தனலாபம் பெருகும்
கும்ப ராசிக்காரர்கள்  இளநீர்  மற்றும் கடுகு எண்ணெயால் அபிஷேகம் செய்திட  செல்வ வளம் பெருகும்.
மீனம்  ராசிக்காரர்கள்  குங்குமப்பூ கலந்த பசும்பால் அபிஷேகம் செய்திட நினைத்த காரியம் கைகூடும்.
-

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP