Logo

திருமண தடை நீங்க இன்று இதை மிஸ் பண்ணாதீங்க!!

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது, அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.
 | 

திருமண தடை நீங்க இன்று இதை மிஸ் பண்ணாதீங்க!!

மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இந்த மூன்றாம் பிறைச் சந்திரனை, நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து, தரிசிக்க வேண்டும்.  மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல, அழகாக வளைவாகக் காட்சி தரும்.

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது, அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். 

அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமா கவும் இருக்கும். மூன்றாம் பிறையானது. இரவு வருவதற்கு முன்னே. 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால், மூர்க்கனும் அறிவு பெறுவான்.
நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.
ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால், ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.
ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.
வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.
நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP