Logo

அய்யனாரை ஏன் வழி படுகிறார்கள் தெரியுமா ? இதான் காரணம்..

 | 

ஒரு மனிதனுக்கு எதிரியாக , யாராவது ஒருவராவது நிச்சயம் இருப்பார்கள். அந்த எதிரிகள் நம் பக்கம் தலை வைத்து கூட படுக்காமல் இருக்க வேண்டும் என்றால் , நாம் அய்யனாரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழி.

குதிரை என்பது சூரிய பகவானுக்கு உகந்ததாக சொல்லப்பட்டாலும் , அந்த குதிரை ஐயனாருக்கு மிகவும் உகந்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அய்யனார் கோவிலில் , அய்யனார் குதிரை மீது அமர்ந்து இருப்பார்.

உங்களுக்கு எதிரிகளுடைய பிரச்சனை அதிகமாக இருந்தால் , அய்யனார் கோவிலுக்கு மண் குதிரையை வாங்கி தானமாகக் கொடுப்பது ஒரு சிறந்த வழி. அதிலும் குறிப்பாக, சொத்துப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் சொத்து பிரச்சினையால் ஏமாற்றம் அடைந்தவர்கள், இந்த அய்யனாரை திங்கட்கிழமை அன்று வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.

உங்களது சொத்தினை மற்றவர்களை நம்பி இழந்திருந்தாலும் சரி. உங்களது சொத்தை அடுத்தவர் ஏமாற்றி பிடிங்கிக் கொண்டாலும் சரி. உங்களுடைய சொத்து திரும்பவும் உங்கள் கைக்கே வரவேண்டும் என்று நினைத்து , அய்யனார் கோவிலுக்கு சென்று , அய்யனார் கோவிலில் இருக்கும் மண்ணை சிறிதளவு எடுத்து உங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வேண்டிக் கொள்ள வேண்டும்.

அய்யனார் கோவிலில் மண் இல்லாமல் கட்டாயம் இருக்காது. அய்யனார் திறந்த வெளியில் , ஆகாய மார்க்கமாக தான் அமர்ந்திருப்பார். செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள், கூட இவரை வழிபட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. அய்யனாரை யார் வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு , மன தைரியமும் அதிகரிக்கும். எதிரி பிரச்சனையும் இருக்காது. யாராலும் நீங்கள் ஏமாற்ற படமாட்டீர்கள் என்பது உறுதி. கோபமான சக்தி வாய்ந்த தெய்வங்களுல், இந்த அய்யனாரும் கட்டாயம் அடங்குவார்

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP