தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Jul 26, 2018, 18:46 IST
| உலக புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அன்னைக்கு அருட்தந்தை விக்டர் லோபோ தலைமையி்ல் பொன் மகுடமும் சூட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று துவங்கி ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிற இவ்விழாவில், நிறைவு நாளான ஆகஸ்ட் 5ம் தேதி அன்னையில் திருவுருவ ஊர்வலம் நடைபெறுகிறது.
newstm.in