Logo

சாய்பாபாவின் சிறப்பான குணாதிசயங்கள்

 | 

தங்களது வீட்டைத் துறந்து, காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்து கொண்டு தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கும் பல முனிவர்கள் உள்ளனர். மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறந்து மூழ்கி இருப்பார்கள். சாய்பாபா அவ்வைகையைச் சார்ந்தவர் அல்ல.

அவருக்கு வீடில்லை, மனைவி இல்லை, மக்களில்லை, சேய்மை அண்மை உறவினர்கள் யாருமே இல்லை. எனினும் அவர் இவ்வுலகத்தில் (சமூகத்தில்) வாழ்ந்தார். நாலைந்து வீடுகளிலிருந்து தமது  உணவை இரந்து உண்டு, எப்போதும் வேப்ப மரதடியிலேயே வாழ்ந்தார். உலக விவகாரங்களை நடத்திக் கொண்டு, மக்களுக்கு  உலகில் எங்ஙனம் நடக்கப் பழக வேண்டுமெனப் போதித்தார். கடவுள் காட்சியைப் பெற்றப்பின், மக்களின் சுபிட்சத்துக்காகப் பாடுபடும் முனிவர்களையோ, சாதுக்களையோ காண்பதரிது. சாய்பாபா இவர்களிலெல்லாம் தலையாயவர். எனவே, இத்தகைய அசாதாரண அறிவெல்லையை கடந்த விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல்(சாய்பாபா) அவதரித்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டது. குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது. தூயவர்களாகிய அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 

டாக்டர். வி.ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP