Logo

மனதில் அழுக்கை சுமக்கலாமா?

பொறாமை, கோபம், வஞ்சம், சூது, பகைமை என்று மனத்தை நிரப்பி சுமந்துகொண்டு வாழ் கிறார்கள். அதை வெளியே தூக்கி எறிந்தால்...
 | 

மனதில் அழுக்கை சுமக்கலாமா?

பேராசை மிக்கவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும். எனக்கு பரிதாபமே மிஞ்சும்.உலகில் வாழ்வில் எத்தனையோ இன்பங்கள் நம்மை  சூழ்ந்திருக்க அதை அனுபவிக்க இயலாமல் துக்க மூட்டைகளை சுமந்துகொண்டு திரிவதே அவர்களது வழக்கமாக இருக்கும். 

இந்திர லோகத்தில் இந்திரனும், நாரதரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நாரதரே பேராசை பெருநஷ்டம் என்று சொல்கிறார்கள். ஆனாலும் ஏன் மனி தர்கள் பேராசைப்படுவதை நிறுத்துவதே இல்லை என்று கேட்டான் இந்திரன்.அது மனிதர்களுக்கே உரியது என்று பதிலுறுத்தான். அதைத் தீர்க் கவே முடியாதா? என்றான் இந்திரன். 

மிகவும் சிரமமான கேள்வியாயிற்றே இது. இருப்பவனுக்கு எவ்வளவு இருந்தாலும் போதாதே.அவனை திருப்திபடுத்துவது இயலாத காரியம் ஆயிற்றே என்றார் நாரதர் பதிலுக்கு. அப்படியானால் ஒன்று செய்வோம். பூலோகத்தில் வெற்று மனிதனாக இருப்பவனை சோதித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள். முடிவெடுத்த பிறகு இருவருக்குமே இதற்கு விடை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது.

பிச்சைக்காரன் ஒருவன் கையில் எந்த பாத்திரமும் இல்லாமல் தனித்து இருந் தான். யாராவது உணவு கொடுத்தால் கூட அதை கையால் வாங் கியே உண்டான். கிழிந்த கந்தல் ஆடையோடு இருந்தவனைத் தேர்ந்தெடுத்து விலை உயர்ந்த ஆடையுடன் அவனிடம் சென்றார்கள். இவ்வளவு கிழிந்த ஆடையை உடுத்தி கொண்டிருக்கிறாயே. எங்களிடம் இந்த ஆடை வீணாக இருக்கிறது. இதை வேண்டுமானால் உடுத்திக்கொள். உன் ஆயுள் முழுமைக்கும் இந்த ஆடை கிழியாமல் நேர்த்தியாக இருக்கும் என்றார்கள்.

பிச்சைக்காரன் நன்றி சொல்லியபடி அந்த ஆடையை வாங்கி அணிந்து கொண்டான். இப்போது அவனது தோற்றம் சற்று செல்வம் மிக்கவனாக காட்டியது. அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி இது போதும் வாழ்வு முழுமைக்கும் என்றான். ஒரு வழியாக திருப்தியான பேராசை இல்லாத மனித னைக் கண்டு விட்டோம் என்று நாரதரும், இந்திரனும் மகிழ்ந்தார்கள். உனக்குத்தான் இந்த ஆடை இறுதிவரை இருக்குமே.அப்புறம் எதற்கு கந்தல் துணிகளை வைத்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள். 

அவனும் ஆமோதித்தான். பிறகு இருவரும் திரும்பும் சமயம் அதை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டான். அவனுக்கு சந்தேகம் வேறு இந்த ஆடை உண்மையில் உறுதியாக இருக்குமா. அப்படியே வைத்துக்கொண்டாலும் மாற்றுத்துணி வேண்டுமே என்று பத்திரமாக பழைய கந்தல் துணியைப் பாதுகாத்துவந்தான்.

மறுநாள் அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வந்தார்கள் இந்திரனும், நாரதரும். கக்கத்தில் துணி மூட்டையை வைத்தபடி உணவை தேடி அலைந்தான். விருந்து ஒன்றில் இவனுக்கு உணவு பரிமாறினார்கள். அப்போதும் அவன் விருந்தின் சுவையைக் கவனிக்காமல் கீழே விழுந்த துணிமூட்டையில் கவனம் வைத்திருந்தான். கண் அருகே சுவையான உணவுகள் இருந்தும் அவனால் வயிறு நிறைய சாப்பிடமுடியவில்லை. நாட்கள் கழிந்தது.

ஆடைகள் கொடுத்தவர்கள் சொன்னது போல் இது உறுதியான ஆடைதான் போலும். ஆனாலும் இந்த ஆடையைத் தூக்கிப்போடாமல் வைத்துக் கொள்ளலாம் என்று அதை கையிலேயே வைத்துக்கொண்டு திரிந்தான்.எல்லோரும் செல்வாக்கான ஆடை உடுத்திய கந்தல் துணி பிச்சைக்காரன் என்று அழைத்தார்கள். வயதாகிவிட்டது. மரணப்படுக்கையில் கிடந்தான். அப்போதாவது திருந்திவிட்டானா என்று பார்க்க இந்திரனும், நாரதரும் வந்தார்கள். அப்போதும் தலைமாட்டிலேயே கந்தல் துணி மூட்டையை வைத்து இருந்தான்.

அவனிடம் விலை மதிக்கமுடியாத ஆடை இருந்தும் இந்த கந்தல் துணி மூட்டை அவன் மகிழ்ச்சியை முற்றிலும் குலைத்துவிட்டது. நல்ல ஆடையைக் கொடுத்தும் அவனது பேராசையால் அவன் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டான். மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இவர் களைத் திருத்த முடியாது என்று உணர்ந்துகொண்டார்கள் இந்திரனும், நாரதரும்.

வேண்டாத இந்த அழுக்கு மூட்டை போல் மனிதர்களும் தம்மிடம் இயல்பாகவே இருக்கும் நல்ல குணத்தை விடுத்து பொறாமை, கோபம், வஞ் சம், சூது, பகைமை என்று மனத்தை நிரப்பி  சுமந்துகொண்டு வாழ்கிறார்கள். அதை வெளியே தூக்கி எறிந்தால் வாழ்வு முழுமைக்குமே மகிழ்ச்சி தான். நீங்களும் தூக்கி எறிந்துவிடுங்களேன் பழமை, குரோதம், வஞ்சம், சூது இவையெல்லாம் இல்லாத அன்பு மட்டுமே நிறைந்த மனதோடு வாழ்வோம்..   

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP