நேச நாயனார்
சிவனடியார்களுக்காகவே வாழ்ந்து அவர்களுக்கு தொண்டு செய்வதற்கே தம் வாழ்க்கையை அர்ப்ப ணித்தார்.இவரது பக்தியில் மகிழ்ந்த எம்பெரு மான் இறுதியில் பரமனின் பாதத்தை
Aug 1, 2019, 11:00 IST
| நல் ஒழுக்கம் நிறைந்த பெரியோர்கள் நிறைந்து வாழும் காம்பீலி என்னும் பழம்பதி என்னும் ஊரில் காளர் மரபில்அவதரித்தார் நேச நாயனார். காளர் குலத்தில் தலைவரான இவர் தம்மிடம் வரும் சிவனடியார்களை அன்புடன் உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வஸ்திரங்களையும், கோவணத்தை யும் செய்து மகிழ்வோடு தந்து மகிழ்ந்துவந்தார்.
முக்காலமும் எம்பெருமானை நினைத்து வாழ்ந்துவந்த இவர் அவர் மீது அன்பு கொள்ளும் அடியார்களுக்கு செய்யும் தொண்டை சிறந்த தொண்டாக நினைத்து செய்துவந்தார்.சிவனடியார்களுக்காகவே வாழ்ந்து அவர்களுக்கு தொண்டு செய்வதற்கே தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.இவரது பக்தியில் மகிழ்ந்த எம்பெருமான் இறுதியில் பரமனின் பாதத்தை அடைந்தார்.
பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.
newstm.in
newstm.in