ரஜினி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தர்பார் படத்தின் படப்பிடிப்பு அங்கு பெய்த கன மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை திரும்பிய தர்பார் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
Aug 17, 2019, 18:00 IST
| நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநயாகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
அனிரூத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் மற்றும் சமூக சேவகர் என இரட்டை வேடங்களில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு பெய்த கன மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை திரும்பிய தர்பார் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
newstm.in
newstm.in