பங்குச் சந்தை: சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்வு!
வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச் சந்தையில் 191 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 57 புள்ளிகளும் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 191 புள்ளிகள் ஏற்றத்துடன் 35,704 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 57 புள்ளிகள் உ.யர்ந்து 10,729 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை 0.11 முதல் 3.3. சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது.
newstm.in