1. Home
  2. வர்த்தகம்

தொடர்ந்து சாதனை படைக்கும் பங்குச்சந்தை!

தொடர்ந்து சாதனை படைக்கும் பங்குச்சந்தை!


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 286.43 புள்ளிகள் அதிகரித்து 35,798.58 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக முடிவில் 35,827.70 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 71.50 புள்ளிகள் உயர்ந்து 10,966.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,975.10 என்ற புள்ளிகளை எட்டியது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், விப்ரோ, பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

newstm.in

Trending News

Latest News

You May Like