1. Home
  2. ஜோதிடம்

இந்த வார ராசிபலன்- டிச29-ஜன04-2020

இந்த வார ராசிபலன்- டிச29-ஜன04-2020

newstm-weekly-astrology-29-04-jan-2020

இந்த வார ராசிபலன்- டிச29-ஜன04-2020

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

22.12.2019 முதல் 28.12.2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்..

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் -   பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்கள்: கலையார்வம் மிக்க மேஷ ராசியினரே, இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். வார இறுதியில்  நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். இந்தவாரம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்குஎதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. பரிகாரம்: திருப்பரங்குன்றம் முருகனை நினைத்து வணங்க முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ   -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்  -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறும் ரிஷப ராசியினரே இந்த வாரம் இறுதியில் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார் கள். பணவரத்தும் இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அது மறைந்துவிடும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு: மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும்.  மாணவர்களுக்கு: பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: அஷ்ட லட்சுமி கோவிலுக்கு சென்று வர எல்லா செல்வங்களும் கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிகிரகநிலை: ராசியில்  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: உலக அனுபவ அறிவை பெற்ற மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர். இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பண வரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடு வது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட் களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்ச லும், மன சோர்வும் அடைய நேரிடும்.  குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு: மனத்திருப்தியுடன் காரியங்களை  செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: மற்றவர்கள் கூறு வதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்ப தில் கவனம் தேவை. பரிகாரம்: ஸ்ரீமன் நாராயணரை தினமும் வணங்கி வர ஏராளமான நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் கடகராசியினரே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்ட வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வார இறுதியில் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்.  உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன்  அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.  பிள்ளை களிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.    பெண்களுக்கு: மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு: புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு  மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். பரிகாரம்: ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு உதவ வாழ்வில் திருப்பம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  செவ்வாய்  -  பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய சிம்மராசியினரே, இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பெண்களுக்கு: முயற்சிகளில் சாதக மான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப் படும் பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப் பெண் பெற உதவும்.  பரிகாரம்: திருவாலாங்காடு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட துன்பங்கள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் - சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: அசத்தலான நடை உடை பாவனையுடன் ஆடம்பரமாக வாழும் கன்னி ராசியினரே இந்த வாரம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது  அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்ட மிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரி களின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுத லாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்களுக்கு: முயற்சிகள் சாதகமான பலன்தரும். வார இறுதியில் பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு: பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும். பரிகாரம்: குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றி வர குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் -   தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் துலாராசியினரே இந்தவாரம், ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு: யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. மாணவர்களுக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை மனதார துதியுங்கள். மனம் அமைதி பெறும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய விருச்சிக ராசியினரே இந்தவாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளி டம் பாராட்டு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். பெண்களுக்கு: வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும்.  மாணவர்களுக்கு: போட்டி, பந்தயங்க ளில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது. பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எல்லா நன்மைகளும் நடைபெறும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்கிரகநிலை: ராசியில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  ராஹு -  அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய தனுசு ராசியினரே  இந்தவாரம் இறுதியில் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.  முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச் சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப் படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட் டும் கிடைக்கப்பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதையும் கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு: வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு: போட்டிகள் குறை யும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். பரிகாரம்: குரு காயத்ரீ சொல்லி பகவானை வழிபாடு செய்ய துன்பங்கள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்கிரகநிலை: ராசியில் சந்திரன், சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய மகர ராசியினரே இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாக லாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளை களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. மாணவர்களுக்கு: முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண்  பெற அதிக நேரம் படிப்பது நல்லது. பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் போட்டு வணங்க பிரச்சனைகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் -  லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் கும்ப ராசியினரே இந்த வாரம் பெறுவதால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை.  வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.  பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டா கும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு:சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு: யாருக்கும் உத்திர வாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை. பரிகாரம்: சனிக்கிழமை எண்ணெய்க் குளியல் காரியத் தடைகளை விலக்கும் சிறந்த பரிகாரமாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 30-12-2019 அன்று காலை 10.29 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  01-01-2020 அன்று இரவு 9.53 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  04-01-2020 அன்று காலை 9.31 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் மீனராசியினரே, இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன்  வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு: வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.  பரிகாரம்: இல்லத்தில் கணபதி ஹோமம் செய்வது எடுத்த காரியங்களில் இருந்த தடையை விலக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

newstm.in

Trending News

Latest News

You May Like