{"vars":{"id": "106785:4629"}}

ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலை பள்ளிக் கழிவறையில் பச்சிளம் சிசு..!!

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கழிவறை அருகே பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில் இறந்த நிலையில் ஆண் குழந்தை கிடந்துள்ளது. இதையடுத்து திருவெறும்பூர் காவல் நிலையித்திற்கு தகவல் கொடுத்தனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திர தேவநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இந்த குழந்தை தவறான உறவில் பிறந்ததா? அல்லது வேறு யாரேனும் இந்த குழந்தையை இங்கு வீசி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.