எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொன்றது பயங்கரவாதிகளா? வெளியான திடுக்கிடும் தகவல்!
மார்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கு இடமான இருவரின் புகைப்படங்களையும், சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோவையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்த போது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிய குற்றவாளிகளின் அடையாளம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதன்படி குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தது.
தற்போது மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கேரளாவை சேர்ந்த முகமது சமி, ஹெளசிக் ஆகியோருக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. முகமது சமி, ஹெளசிக் ஆகியோர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக திடுகிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக டிஜிபி திருபாதி களியக்காவிளையில் போலிஸ் சுட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
newstm.in
newstm.in